6 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் அரிய வகை பறவை : ஆர்வத்துடன் கண்டுகளித்த மாணவர்கள்

கோவை : கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை இனத்தைச் சேர்ந்த யூரேசியன் ஹாபி பறவையைப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

கோவை : கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை இனத்தைச் சேர்ந்த யூரேசியன் ஹாபி பறவையைப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 11 முதல் 13 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு கெனாஃபி இயற்கை அகாடமியின் சார்பில் இளநிலை சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பறவைகளை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், உக்கடம் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பலவிதமான பறவை இனங்களை மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். குறிப்பாக, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குளத்திற்கு வருகை புரிந்திருந்த 'யூரேசியன் ஹாபி' என்ற அரிய வகை இனத்தை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தப் பறவை கோவைக்கு வந்திருப்பது முதல்முறையாகும். 



மாணவர்களுடன் கெனாஃபி இயற்கை அகாடமியைச் சேர்ந்த சரவணன் சந்திரசேகர் பறவை இனங்கள் குறித்து விளக்களித்தார். "நரேன் சூர்யா, பிரார்த்தனா, பிரதிக்ஷா மற்றும் நிதின் ஆகியோர் இந்தக் குளக்கரையில் இருந்த அழகிய பலவிதமான பறவைகளை கண்டு ரசித்தனர். இவர்கள் தொடர்ச்சியாக பறவை இனங்களை காண வருபவர்களாவர். நாள்தோறும் பார்க்கும் பறவை இனங்களை காட்டிலும், அரிய வகை இனங்களை கண்டு ரசிக்கும் போது, அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்," என்கிறார் சி.என்.ஏ.,வைச் சேர்ந்த சரவணன் சந்திரசேகர்.

உக்கடம் குளப்பகுதியில் இந்தியன் கிரே ஹாம்பில், ஆசியன் பாரடைஸ் ப்ளைகேட்சர் மற்றும் கிங்பிஷர் உள்ளிட்ட அன்றாட பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள ஒரே மாதிரியான உருவம், நிறம் போன்றவற்றைக் கொண்ட பறவைகளை வகைப்படுத்திக் காண்பது என்பது மாணவர்களால் முடியாத ஒன்றாகும். அனுபவம் மிகுந்தவர்களால் மட்டுமே அதனை வகைப்படுத்தி, பறவையின் இனத்தின் பெயரை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

"பெரிகிரின் ஃபெல்கான், அமுல் பெல்கான் மற்றும் யூரேசியன் ஹாபி ஆகிய பறவைகளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அவை அனைத்தும் ஒரே மாதிரியான உருவத்தைக் கொண்டவை," என்றார் சரவணன் சந்திரசேகர்.

பெரும்பாலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் ஐரோப்பாவில் இருந்து பறவைகள் பிறப் பகுதிகளுக்குச் செல்லும். சில சமயங்களில், சற்று தாமதமாக அக்டோபர் மாதத்தில் இருப்பிடத்தை வெளியேறுகின்றன. இந்த நேரங்களில் ஆப்ரிக்கா மற்றும் வட இந்தியாக்களில் நிலவும் குளிர்காலநிலைவயை அனுபவித்துவிட்டு, தென் இந்தியா வழியாக மீண்டும் ஏப்ரல் மாதத்திற்குள் ஐரோப்பாவிற்கே திரும்பி விடுகின்றன. 

"நகர்புறப் புறத்தில் இருக்கும் குளங்களில், உக்கடம் குளம் முக்கியமானதாகும். உயரமாக பறந்து செல்லும் போது பறவைகள் இந்தக் குளத்தினை தேர்வு செய்கின்றன. இதன்மூலம், குளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது," இவ்வாறு கூறினார் சரவணன் சந்திரசேகர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...