கோவை : சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை தடுத்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், நீர்நிலைகளில் உப்பு கட்டிகளை வைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை தடுத்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், நீர்நிலைகளில் உப்பு கட்டிகளை வைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரக பகுதிகள் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள காடுகள் என்பதால், இங்கு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையும், நீலகிரி வனப்பகுதியினை இணைக்கும் வனப்பகுதியாகவும் திகழ்வதால், தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகளும் அதிகம் உள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால் காடுகளில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நீர்நிலைகளை தேடி வந்து தண்ணீர் அருந்தும் வன விலங்குள் மற்றும் யானை உள்ளிட்ட பேரூயிரனங்களுக்கு குடல் புழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, அதனை தடுக்க வனத்துறையினர் உப்பு கட்டிகளை நீர்நிலைகளில் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு இந்த பணியினை முடுக்கி விட்டுள்ளனர். தண்ணீரினை தேடி வரும் வன விலங்குகள் இந்த உப்பு கட்டிகளை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வன விலங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரக பகுதிகள் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள காடுகள் என்பதால், இங்கு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையும், நீலகிரி வனப்பகுதியினை இணைக்கும் வனப்பகுதியாகவும் திகழ்வதால், தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகளும் அதிகம் உள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால் காடுகளில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நீர்நிலைகளை தேடி வந்து தண்ணீர் அருந்தும் வன விலங்குள் மற்றும் யானை உள்ளிட்ட பேரூயிரனங்களுக்கு குடல் புழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, அதனை தடுக்க வனத்துறையினர் உப்பு கட்டிகளை நீர்நிலைகளில் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு இந்த பணியினை முடுக்கி விட்டுள்ளனர். தண்ணீரினை தேடி வரும் வன விலங்குகள் இந்த உப்பு கட்டிகளை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வன விலங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.