தமிழக வனப்பகுதிகளில் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை டிரக்கிங் செல்ல தடை

கோவை : காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக வனப்பகுதிகளில் டிரக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை : காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக வனப்பகுதிகளில் டிரக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 



கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்றவர்களில் 22 பேர் காட்டுத் தீயிக்கு இரையாகினர். இந்த நிலையில், டிரெக்கிங் செல்வதற்கு புதிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அண்மையில் தமிழக அரசு விதித்துள்ளது. 

அதாவது:- மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர் / வன உயிரினக் காப்பாளர் / துணை இயக்குநரின் முன்அனுமதியினை உரிய முறையில் பெற்றிடல் வேண்டும். மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிதான பாதை, மிதமான பாதை மற்றும் கடினமான பாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ. 200/- வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ350/- வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.500/- வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளைப் பொறுத்தவரையில், எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.1,500/- வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.3,000/- வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.5,000/- வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி, எளிதான பாதை, மற்றும் மிதமான பாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் தங்களுடன், ஒரு வழிகாட்டியினையும், கடினப் பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும் போது ஒரு வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், வனத்துறையில் பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு நிறுவனம் / சங்கம் / அமைப்பும் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது என்பதும் விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்ட காலம், வழித்தடப் பயன்பாடு, மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் ஆகியவற்றையும் உள்ளடக்கி இவ்விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வோர், இவ்விதிகளை கடைபிடித்து வனத்துறைக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காட்டுத் தீ எச்சரிக்கையினால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக வனப்பகுதிகளில் டிரக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...