திருப்பூர்: பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருப்பூர்: பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையிலான 8 லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்று நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சார் பதிவாளர் செல்வகுமாரிடம் கணக்கில் வராத மற்றும் ஆவணங்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரத்து 650 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதே போல தற்காலிக இணை சார் பதிவாளர் ஆனந்தியிடம் ரூபாய் 30,000 என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 650 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கணக்கில் காட்டப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் தலைமையிலான 8 லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்று நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சார் பதிவாளர் செல்வகுமாரிடம் கணக்கில் வராத மற்றும் ஆவணங்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரத்து 650 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதே போல தற்காலிக இணை சார் பதிவாளர் ஆனந்தியிடம் ரூபாய் 30,000 என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 650 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கணக்கில் காட்டப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.