கோவை : சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
கோவை : சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
கேரளாவில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபரிமலை பாதுகாப்பு குழு இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் பந்த் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயுத பூஜை விடுமுறைக்காக கேரளா செல்லும் பயனிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.