கோவை : நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை : நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என பல தரப்பினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் சுமார் 4,500 தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அரசாணை எண் 142-ல் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் சூழலில் பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும், எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொடரும் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.