திருப்பூர் : காங்கயம் அருகே ஊரின் மேற்கு திசையில் பட்டியல் இனத்தவர் குடியிருந்தால், ஊருக்கு ஆகாது எனக் கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அதே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கயம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.
திருப்பூர் : காங்கயம் அருகே ஊரின் மேற்கு திசையில் பட்டியல் இனத்தவர் குடியிருந்தால், ஊருக்கு ஆகாது எனக் கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அதே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கயம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.

இது குறித்து புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் காங்கயம் வட்டாட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது :- காங்கயம் தாலுகா, நிழலி ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 20 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1988-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து குடியிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர், தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரின் மேற்குத் திசையில் குடியிருந்தால் தீட்டுப்பட்டு விடும் எனக் கூறி, இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகியும் இன்று வரையில் இவர்கள் அங்கு குடியேற முடியவில்லை என்றும், இந்த செயல் மிகவும் கொடூரமானது என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை அதே இடத்தில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் காங்கயம் வட்டாட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது :- காங்கயம் தாலுகா, நிழலி ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 20 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1988-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து குடியிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர், தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரின் மேற்குத் திசையில் குடியிருந்தால் தீட்டுப்பட்டு விடும் எனக் கூறி, இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகியும் இன்று வரையில் இவர்கள் அங்கு குடியேற முடியவில்லை என்றும், இந்த செயல் மிகவும் கொடூரமானது என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை அதே இடத்தில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.