கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் திருட்டு போயின.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் திருட்டு போயின.
இதனை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் காவல் ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் செவ்வாயன்று தனிப்படை போலீசார் காவல் ஆய்வாளர் சென்ன கேசவன் தலைமையில் மேட்டுப்பாளையம் டேங்க் மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்ததுடன் வாகனத்திற்காக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகரை சேர்ந்த ஜெகன் என்கின்ற ஜெகதீஸ் என்பதும் கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வாகன திருட்டு சம்பந்தமாக 120 வழக்குகள் உள்ளன.
பிடிபட்ட குற்றவாளியிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் காவல் ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் செவ்வாயன்று தனிப்படை போலீசார் காவல் ஆய்வாளர் சென்ன கேசவன் தலைமையில் மேட்டுப்பாளையம் டேங்க் மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்ததுடன் வாகனத்திற்காக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகரை சேர்ந்த ஜெகன் என்கின்ற ஜெகதீஸ் என்பதும் கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வாகன திருட்டு சம்பந்தமாக 120 வழக்குகள் உள்ளன.
பிடிபட்ட குற்றவாளியிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.