கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய கட்டிடங்களில் சர்வதேச புகழ்பெற்ற 'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வண்ணமயமான பிரமாண்ட ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன.
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய கட்டிடங்களில் சர்வதேச புகழ்பெற்ற 'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வண்ணமயமான பிரமாண்ட ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் உயரமான அரசு கட்டிடங்களில் எழில்மிகு வண்ணச் சுவர் ஓவியங்களை வரைந்திட கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் தலைமையிலான குழுவினரோடு கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. ஓவியம் வரைவதற்கான சுவர், ஓவியர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. பன்னாட்டு ஓவியர்களைக் கொண்ட இக்குழு பல நாடுகளில் இலவசமாக சுவர் ஓவியங்களை வரைந்து கலைச் சேவையை ஆற்றி வருகிறது.

இக்குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சியை அழகு படுத்தும் விதமாக சுவர் ஓவியம் வரையும் பணிகளை ஓவியக் கலைஞர்கள் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அலுவலக கட்டிடங்களில் வர்ணம் பூசப்பட்டு, சுவர் ஓவியம் வரையும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
"நகரின் பெரும்பாலான சுவர்கள் போஸ்டர்களாலும், அரசியல் கட்சிகளின் பெயர்களாலும் நிறைந்து மிக மோசமாகக் காட்சியளித்து வரும் நிலையில், சுவர் ஓவியங்கள் நகரின் அழகை மேலும் அதிகரிக்கும். கோவையைச் சேர்ந்த இளம் ஓவியர்கள் பன்னாட்டு ஓவியர்களின் கலை நுணுக்கங்களை அறிந்து கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்," இவ்வாறு ஓவியக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
அடுத்தடுத்து, டவுன்ஹால் பகுதியில் உள்ள நூலகக் கட்டிடம், ரெட் க்ராஸ் கட்டிடம் மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஆகியவற்றில் ஓவியம் வரையப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் உயரமான அரசு கட்டிடங்களில் எழில்மிகு வண்ணச் சுவர் ஓவியங்களை வரைந்திட கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் தலைமையிலான குழுவினரோடு கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. ஓவியம் வரைவதற்கான சுவர், ஓவியர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. பன்னாட்டு ஓவியர்களைக் கொண்ட இக்குழு பல நாடுகளில் இலவசமாக சுவர் ஓவியங்களை வரைந்து கலைச் சேவையை ஆற்றி வருகிறது.

இக்குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சியை அழகு படுத்தும் விதமாக சுவர் ஓவியம் வரையும் பணிகளை ஓவியக் கலைஞர்கள் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அலுவலக கட்டிடங்களில் வர்ணம் பூசப்பட்டு, சுவர் ஓவியம் வரையும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
"நகரின் பெரும்பாலான சுவர்கள் போஸ்டர்களாலும், அரசியல் கட்சிகளின் பெயர்களாலும் நிறைந்து மிக மோசமாகக் காட்சியளித்து வரும் நிலையில், சுவர் ஓவியங்கள் நகரின் அழகை மேலும் அதிகரிக்கும். கோவையைச் சேர்ந்த இளம் ஓவியர்கள் பன்னாட்டு ஓவியர்களின் கலை நுணுக்கங்களை அறிந்து கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்," இவ்வாறு ஓவியக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
அடுத்தடுத்து, டவுன்ஹால் பகுதியில் உள்ள நூலகக் கட்டிடம், ரெட் க்ராஸ் கட்டிடம் மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஆகியவற்றில் ஓவியம் வரையப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.