கோவை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடப்பதாக தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்
கோவை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடப்பதாக தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கோவையில் தற்போது தொடர் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சிங்காநல்லூர் தொகுதி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடக்கின்றது. மாநகராட்சியின் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராகவும், தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, ரூ. 95 கோடியே 50 லட்சம் பெறப்பட்டு திடக்கழிவு மேலாண்மைக்காகவும், விஞ்ஞான ரீதியிலும் குப்பைகள் அழிக்கப்பட்டது. ஆனால், இப்போது உள்ளாட்சித்துறை சீர்கெட்டு விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சாதகமாகவே இருக்கிறது.
மேலும், டெண்டர்களை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்ல வேண்டாம். எனவே, அவர் கை காட்டுபவர்களுக்கே டெண்டர் செல்கின்றது. ஆன்லைன் விண்ணப்பங்கள் கொடுப்பதோடு சரி, செயல்படுவதில்லை. எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் கூட ஒருசில பகுதிகள் கண்டுகொள்ளப்படவில்லை. கோவை மாவட்டம் முழுவதும் இருக்கும் 9 சட்டமன்ற தொகுதிகளும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இந்த மோசமான உள்ளாட்சித்துறையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியாளர்களை மாற்றும் காலம் வரை மக்களைக் காப்பாற்ற முடியாது, என்றார்.
நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கோவையில் தற்போது தொடர் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சிங்காநல்லூர் தொகுதி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடக்கின்றது. மாநகராட்சியின் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராகவும், தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, ரூ. 95 கோடியே 50 லட்சம் பெறப்பட்டு திடக்கழிவு மேலாண்மைக்காகவும், விஞ்ஞான ரீதியிலும் குப்பைகள் அழிக்கப்பட்டது. ஆனால், இப்போது உள்ளாட்சித்துறை சீர்கெட்டு விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சாதகமாகவே இருக்கிறது.
மேலும், டெண்டர்களை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்ல வேண்டாம். எனவே, அவர் கை காட்டுபவர்களுக்கே டெண்டர் செல்கின்றது. ஆன்லைன் விண்ணப்பங்கள் கொடுப்பதோடு சரி, செயல்படுவதில்லை. எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் கூட ஒருசில பகுதிகள் கண்டுகொள்ளப்படவில்லை. கோவை மாவட்டம் முழுவதும் இருக்கும் 9 சட்டமன்ற தொகுதிகளும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இந்த மோசமான உள்ளாட்சித்துறையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியாளர்களை மாற்றும் காலம் வரை மக்களைக் காப்பாற்ற முடியாது, என்றார்.