நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை திசைதிருப்பவே #metoo விவகாரம் : நல்லசாமி குற்றச்சாட்டு

நீலகிரி : பெட்ரோல், டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் நிலவி வரும் நிலையில், 'மீடு' (Metoo) பிரச்சனையைப் பெரிதுபடுத்துவது பல பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காகவே என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


நீலகிரி : பெட்ரோல், டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் நிலவி வரும் நிலையில், 'மீடு' (Metoo) பிரச்சனையைப் பெரிதுபடுத்துவது பல பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காகவே என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

நீலகிரி மலை மாவட்டத்தில் உள்ள பாண்டியாறு, புன்னம்புழா ஆகிய ஆறுகளின் நீர் சாளியாறு வழியாக சுமார் 15 டி.எம்.சி. வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நீர் வீணாகக் கடலில் கலப்பதை உணர்ந்து மத்திய அரசு கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் அறிவித்த நதிகள் இணைப்பு திட்டம் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. தற்பொழுது, ஆட்சி முடியும் தருவாயிலாவது, இந்த நதிநீர் இணைப்பு திட்டத்தை பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தின் மூலமாக நிறைவேற்ற வேண்டும். 

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் மதுகொள்கை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு முன்னோட்டமாக டிசம்பர் 24-ம்தேதி பெரியார் நினைவு நாளில் சென்னை பெரியார் திடலிலுள்ள நினைவிடத்தில் கள்ளை கைகளில் ஏந்தி கள்ளுக்குள்ள தடையை நீக்குமாறு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 

கள்ளுக்கு தடையை விலக்கும் வகையிலும், எடப்பாடி அரசுக்கு சவால் விடும் விதமாகவும், வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதி சென்னையில் அசுமேத யாகம் நடத்தப்படும். 

பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தொடும் என அஞ்சப்படும் நிலையில், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், இந்திய நாட்டிற்கு நெருக்கடியை தீர்க்கும் விதமாகவும், எத்தனாலை பயன்படுத்த முன்வர வேண்டும். அதேபோல், சர்க்கரை ஆலைகளின் சரிபாதியை எத்தனால் ஆலைகளாக மாற்றுவதன் மூலம் கரும்பு சாகுபடிக்கும் ஆலைகளுக்கும் வந்திருக்கும் நெருக்கடியைத் தீர்க்க முடியும். 

நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி ஏற்படும் போது பெருமளவு தேக்கமடைந்து விடுகிறது. இதற்கு, ஓட்கா மதுவை தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். இதன்மூலம், ஏற்படும் நெருக்கடியை விவசாயிகள் சமாளிக்க முடியும்.

1969 முதல் சினிமா நடிகர்கள் தான் ஆட்சி அமைத்து வருகின்றனர். இவர்களுக்கு மட்டும் தான் சிறப்பு தகுதி மற்றும் ஆளுமை இருப்பதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழ்நாட்டு மக்களின் அறியாமையை அறுவடை செய்யும். நாட்டில் பெட்ரோல், டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், Metoo பிரச்சனையை பெரிதுபடுத்துவது பல பிரச்சனைகளை திசைதிருப்புவதற்கே ஆகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...