கோவை : லோவா நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச உணவு மற்றும் விவசாய விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்ற கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை : லோவா நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச உணவு மற்றும் விவசாய விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்ற கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் 'நோ ஃபுட் வேஸ்ட்' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் உணவு வீணாவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இவரது முயற்சியால், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 'நோ ஃபுட் வேஸ்ட்' செயல்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் சர்வதேச உணவு மற்றும் விவசாயத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா அமெரிக்கா கண்டத்தில் இருக்கும் நாடான லோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தலைவர்களான சீன துணை அதிபர் ஜிங்பிங், ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கி மூன், முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுமாறு கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 'நோ ஃபுட் வேஸ்ட்' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் உணவு வீணாவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இவரது முயற்சியால், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 'நோ ஃபுட் வேஸ்ட்' செயல்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் சர்வதேச உணவு மற்றும் விவசாயத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா அமெரிக்கா கண்டத்தில் இருக்கும் நாடான லோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தலைவர்களான சீன துணை அதிபர் ஜிங்பிங், ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கி மூன், முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுமாறு கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.