கோவை : விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த கூடாது என வலியுறுத்தி தலைப்பாகை கட்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு மனு அளித்தனர்.
கோவை : விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த கூடாது என வலியுறுத்தி தலைப்பாகை கட்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு மனு அளித்தனர்.
கரூரில் இருந்து கோவை வரை ரூ. 2,400 கோடி மதிப்பில் ஆறுவழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால், சுமார் மூவாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைப்பாகை கட்டி கவன ஈர்ப்பு மனு அளித்தனர். அதில், கரூரில் இருந்து கோவை வரை ஆறுவழி பசுமை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 53 கி.மீ. பயண தூரம் குறையும். மேலும், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் வடக்கு பகுதியில் கருமத்தாம்பட்டியில்-கிட்டாம்பாளையம் வழியாக சத்தி சாலை வரையும், சத்தி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை உள்ள 12 வழித்தடங்களில் கீரணத்தம் வழியாக பெரிய நாயக்கன் பாளையம் செல்லும் வழித்தடத்தை விரிவாக்கம் செய்தால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கலாம், இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
கரூரில் இருந்து கோவை வரை ரூ. 2,400 கோடி மதிப்பில் ஆறுவழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால், சுமார் மூவாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைப்பாகை கட்டி கவன ஈர்ப்பு மனு அளித்தனர். அதில், கரூரில் இருந்து கோவை வரை ஆறுவழி பசுமை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 53 கி.மீ. பயண தூரம் குறையும். மேலும், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் வடக்கு பகுதியில் கருமத்தாம்பட்டியில்-கிட்டாம்பாளையம் வழியாக சத்தி சாலை வரையும், சத்தி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை உள்ள 12 வழித்தடங்களில் கீரணத்தம் வழியாக பெரிய நாயக்கன் பாளையம் செல்லும் வழித்தடத்தை விரிவாக்கம் செய்தால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கலாம், இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.