கோவை : அரசு அலுவலகங்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூகநீதி கட்சியினர் மனு அளித்தனர்.
கோவை : அரசு அலுவலகங்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூகநீதி கட்சியினர் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சமூகநீதி கட்சி சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது :- சட்டமேதை அம்பேத்கரின் சிலையை வைக்க மாநகர காவல்துறை அனுமதி மறுக்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரது திருவுருவ சிலையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சமூகநீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில்," ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் சிலை வைத்திட கோவை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை அனுமதி வழங்கிய நிலையில், காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.
மேலும், அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க அரசாணை இருந்தும் பெரும்பாலான இடங்களில் அம்பேத்கர் படங்கள் வைக்கப்படாமல் உள்ளது.
ஆகவே, உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சிலை அமைக்க மாநகர காவல்துறை அனுமதி அளித்திட ஆட்சியர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," இவ்வாறு கூறினார்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சமூகநீதி கட்சி சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது :- சட்டமேதை அம்பேத்கரின் சிலையை வைக்க மாநகர காவல்துறை அனுமதி மறுக்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரது திருவுருவ சிலையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சமூகநீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில்," ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் சிலை வைத்திட கோவை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை அனுமதி வழங்கிய நிலையில், காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.
மேலும், அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க அரசாணை இருந்தும் பெரும்பாலான இடங்களில் அம்பேத்கர் படங்கள் வைக்கப்படாமல் உள்ளது.
ஆகவே, உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சிலை அமைக்க மாநகர காவல்துறை அனுமதி அளித்திட ஆட்சியர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," இவ்வாறு கூறினார்.