கோவை : தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் ஓடையை மீட்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் ஓடையை மீட்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மாணி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய பொதுமக்கள், மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மனு ஒன்றை அளித்தனர். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீரோடையை அரசு சார்பில் இரண்டு லட்ச ரூபாயில் செலவில் சீர் செய்து தரப்பட்ட ஓடை, அங்குள்ள தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓடையை மண்மூடி ஆக்கரமிப்பு செய்துள்ளதால், முக்கிய நீர்வழி தடம் தடைப்பட்டு மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விடுகிறது.
அங்கு வசிக்கும் 70 குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கழிவு நீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி நீர் ஓடையை மீட்டு தரகோரி மனு அளித்தனர்.
இது குறித்து அன்னூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மாணி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய பொதுமக்கள், மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மனு ஒன்றை அளித்தனர். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீரோடையை அரசு சார்பில் இரண்டு லட்ச ரூபாயில் செலவில் சீர் செய்து தரப்பட்ட ஓடை, அங்குள்ள தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓடையை மண்மூடி ஆக்கரமிப்பு செய்துள்ளதால், முக்கிய நீர்வழி தடம் தடைப்பட்டு மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விடுகிறது.
அங்கு வசிக்கும் 70 குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கழிவு நீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி நீர் ஓடையை மீட்டு தரகோரி மனு அளித்தனர்.
இது குறித்து அன்னூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தனர்.