கோவை : கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை : கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாநகரில் ராமநாதபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் சாலைகளில் நடந்து செல்வோரிடமிருந்து செல்போன்களை பறித்துச் செல்வதாக புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இராமநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் செல்போன் பேசி சென்றவர்களிடம் செல்போல் பறித்த கொள்ளையர்களான குனியமுத்தூர் சேர்ந்த அன்ஷீட் (21), பாலக்காட்டை சேர்ந்த சுகைல் (17)ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடியதாக மானாமதுரையைச் சேர்ந்த ராஜகோபால் (23), தியாகி குமரன் வீதியை சேர்ந்த பிரகாஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பி.என்புதூரை சேர்ந்த கமலேஷ் (22), வடக்கு ஹவுசிங் யூனிட் சுதாகர் (42), பி.என் பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (21) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.