உடுமலையில் சாக்கடையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு : ரத்தக் கசிவோடு மயங்கி கிடந்த மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்ணால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாக்கடையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாக்கடையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடுமலை அருகே சின்னவீரம்பட்டி கிராமத்தில் இன்று காலை 9 மணியளவில் சாக்கடையில் சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். உடனடியாக வந்த போலீசார் சிசுவின் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், விசாரணை செய்ததில் அங்கிருந்த பொதுமக்கள் சிலர், நேற்று மாலை 6 மணியளவில் கா்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி நிழற்குடையில் அமா்ந்திருந்ததாக தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சிசு சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிந்த இடம் வரை சென்று பார்த்த போது, சாலையோரத்தில் இரத்த கசிவோடு பெண் ஒருவா் மயக்கமடைந்து கிடப்பதை கண்டறிந்தனர். பின்னர், அந்த பெண்ணை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் 

அவரிடம் விசாரணை செய்ததில் பிருந்தா (23) ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த அவரது கணவர் செந்தில், திருப்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதும் கணடுபிடிக்கப்பட்டது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...