திருப்பூர் : அதிமுகவின் சிஸ்டம் சிதைக்கப்பட்டு விட்டதாக தங்கதமிழ்செல்வன் கூறுவது ஏற்புடையதல்ல என திருப்பூரில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்தார்.
திருப்பூர் : அதிமுகவின் சிஸ்டம் சிதைக்கப்பட்டு விட்டதாக தங்கதமிழ்செல்வன் கூறுவது ஏற்புடையதல்ல என திருப்பூரில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்தார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதனையடுத்து காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு செய்தியாளகளிடம் பேசுகையில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் தமிழக அரசிலும் நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

இதனால், தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை விரைந்து முடிக்க வேண்டும், நேற்று ஒ.பி.எஸ் அவர்கள் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக இவர்களே சேர்ந்தது தான் அவரை பொது செயலாளராக அறிவித்தார்கள், இது கட்சிக்குள் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறம்பட செயல்படுகிறார்கள். ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்தது போல டி.டி.வியும் இணைவார் என்று கூறிய காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, அதிமுகவின் சிஸ்டம் எந்த விதத்திலும் சிதைக்கப்படவில்லை எனவும் தங்கத்தமிழ் செல்வன் கூற்று ஏற்புடையதல்ல என்றார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதனையடுத்து காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு செய்தியாளகளிடம் பேசுகையில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் தமிழக அரசிலும் நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

இதனால், தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை விரைந்து முடிக்க வேண்டும், நேற்று ஒ.பி.எஸ் அவர்கள் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக இவர்களே சேர்ந்தது தான் அவரை பொது செயலாளராக அறிவித்தார்கள், இது கட்சிக்குள் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறம்பட செயல்படுகிறார்கள். ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்தது போல டி.டி.வியும் இணைவார் என்று கூறிய காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, அதிமுகவின் சிஸ்டம் எந்த விதத்திலும் சிதைக்கப்படவில்லை எனவும் தங்கத்தமிழ் செல்வன் கூற்று ஏற்புடையதல்ல என்றார்.