நீலகிரி : உதகை அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
நீலகிரி : உதகை அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (42). இவரது மனைவி முபினா (37). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். அப்பாஸ் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பாஸ், தனது மனைவி முபினா மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுமந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அப்பாஸை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கொலையாளி அப்பாஸிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முரளிதரன் இன்று தீர்ப்பளித்தர்.