சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வாழ்வாதாராம் பாதிக்கப்படுவதாக 16 கிராம மக்கள் மனு

நீலகிரி : தொடர் விபத்து ஏற்படுவதால் உதகை - கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மசினகுடி, மாயார் உள்ளிட்ட 16 கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்

நீலகிரி : தொடர் விபத்து ஏற்படுவதால் உதகை - கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மசினகுடி, மாயார் உள்ளிட்ட 16 கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். 

மலை மாவட்டமான நீலகிரியின் உதகையில் இருந்து கல்லட்டி வழியாக கேரளா, கர்நாடாக செல்லும் சுற்றுலா பயணிகளும், சமவெளி பிரதேசங்களில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் சுற்றுலா பயணிகள் 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி பலியாகி வருவது அதிகரித்துள்ளது. 



குறிப்பாக, கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்களின் கார், இந்த மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 நாட்களுக்குப் பிறகு 5 பேர் சடலங்களாகவும், இருவர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வழியாக சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உதகை - கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், மசினகுடி, மாயார், சிங்காரா உள்ளிட்ட 16 கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- மசினகுடி, மாவனெல்லா, மாயார், சிங்காரா உள்ளிட்ட 16 கிராம மக்கள், தாங்கள் பயிரிட்டு வரும் காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்ல முடியாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் வாகனங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது, என வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்று வர தடை ஏதும் இல்லை என்றும், உள்ளூர் மக்கள் இதுகுறித்து பயப்பட தேவையில்லை எனத் தெரிவித்தார்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...