கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவியது. அவ்வாறு பரவிய காய்ச்சல்கள் காரணமாக கோவை, திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதனைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் டெங்கு பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் தற்போது கோவையில் பெய்துவரும் மழை காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 9 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் என மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பன்றி காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடல்நிலை தேறியுள்ளார்.
இப்படி மீண்டும் பரவி வரும் விஷக்காய்ச்சல்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவியது. அவ்வாறு பரவிய காய்ச்சல்கள் காரணமாக கோவை, திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதனைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் டெங்கு பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் தற்போது கோவையில் பெய்துவரும் மழை காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 9 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் என மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பன்றி காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடல்நிலை தேறியுள்ளார்.
இப்படி மீண்டும் பரவி வரும் விஷக்காய்ச்சல்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.