கோவை : கொங்கு மண்டல வளர்ச்சி குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் இன்று சந்தித்து பேசினர்.
கோவை : கொங்கு மண்டல வளர்ச்சி குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் இன்று சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பின் போது இவ்வமைப்பின் தலைவர் ஏ. சக்திவேல், துணைத்தலைவர் வனிதாமோகன், இயக்குநர் ரவிசாம் ஆகியோர் குடியரசு துணை தலைவரிடம் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சி பணியினைப் பற்றி விரிவாக எடுத்து கூறினர். கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் தொழில் முன்னேற்றம், இப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து சமுகப்பணிகளை வெங்கய்யா நாயுடு வெகுவாக பாராட்டினார். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் சேவையினை வியந்து மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும், இம்மண்டலத்தில் உள்ள வளர்ச்சிக்கான தேவைகளை குடியரசு துணை தலைவர் விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக, கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக செல்ல பயணிகள் மற்றும் சரக்கு சேவையினை வேண்டி கூறினர். அதிலும், பயணிகள் பயன்பாட்டிற்கும் மற்றும் பயணிகள் பயணத்திற்கும் சர்வதே நாடுகளில் உள்ளது போல விமானநிலையத்தினை உருவாக்கவும் அதற்கேற்ப வசதிகளை உருவாக்கக் கோரிக்கை விடுத்தனர். மாறிவரும் காலத்திற்கேற்ற முறையில் கொங்கு மண்டல வளர்ச்சியில் மாற்றம் கொண்டுவர பல அறிய திட்டங்களை இங்கு வழங்கக் கேட்டு கொண்டனர். இம் மண்டல வளர்ச்சிக்கு பலதிட்டங்களை வழங்க இதற்கான மனுவினை குடியரசு துணை தலைவரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர்.
இச்சந்திப்பின் போது இவ்வமைப்பின் தலைவர் ஏ. சக்திவேல், துணைத்தலைவர் வனிதாமோகன், இயக்குநர் ரவிசாம் ஆகியோர் குடியரசு துணை தலைவரிடம் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சி பணியினைப் பற்றி விரிவாக எடுத்து கூறினர். கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் தொழில் முன்னேற்றம், இப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து சமுகப்பணிகளை வெங்கய்யா நாயுடு வெகுவாக பாராட்டினார். தொழில் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் சேவையினை வியந்து மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும், இம்மண்டலத்தில் உள்ள வளர்ச்சிக்கான தேவைகளை குடியரசு துணை தலைவர் விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக, கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக செல்ல பயணிகள் மற்றும் சரக்கு சேவையினை வேண்டி கூறினர். அதிலும், பயணிகள் பயன்பாட்டிற்கும் மற்றும் பயணிகள் பயணத்திற்கும் சர்வதே நாடுகளில் உள்ளது போல விமானநிலையத்தினை உருவாக்கவும் அதற்கேற்ப வசதிகளை உருவாக்கக் கோரிக்கை விடுத்தனர். மாறிவரும் காலத்திற்கேற்ற முறையில் கொங்கு மண்டல வளர்ச்சியில் மாற்றம் கொண்டுவர பல அறிய திட்டங்களை இங்கு வழங்கக் கேட்டு கொண்டனர். இம் மண்டல வளர்ச்சிக்கு பலதிட்டங்களை வழங்க இதற்கான மனுவினை குடியரசு துணை தலைவரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர்.