நெல்லையில் மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் : கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றியதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு, வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 500 என இருந்த கட்டணம், ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. 

எனவே, இந்தக் கட்டணத்தை 200 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லைக்குட்பட்ட 89 கல்லூரிகளின் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...