திருப்பூர் : திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த 6-ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பெயர் இப்ராஹிம் (28) என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பணியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் செவந்தாம்பாளையம் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த சுபியன் (31), பர்காத் (32) ஆகிய மேலும் 2 பேரை கைது செய்தனர். வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்தது மாவட்ட ஊரக போலீசாரின் விசாரணையின் போது அவர்கள் கூறினர்.
மேலும் இவர்கள் அளித்த தகவலின் பேரில், செவந்தாம்பளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அல்அமீன் (24), அஸ்ரஃபுல் இஸ்லாம் (31), ஃபர்ஹாட் ஹோசன் (18), பொளாஸ் சந்திர சோர்க்கார் (28), ரோனி (30) ஆகிய மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 8 பேரும் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்குக் கொண்டு சென்றனர்.

திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த 6-ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பெயர் இப்ராஹிம் (28) என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பணியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் செவந்தாம்பாளையம் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த சுபியன் (31), பர்காத் (32) ஆகிய மேலும் 2 பேரை கைது செய்தனர். வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்தது மாவட்ட ஊரக போலீசாரின் விசாரணையின் போது அவர்கள் கூறினர்.
மேலும் இவர்கள் அளித்த தகவலின் பேரில், செவந்தாம்பளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அல்அமீன் (24), அஸ்ரஃபுல் இஸ்லாம் (31), ஃபர்ஹாட் ஹோசன் (18), பொளாஸ் சந்திர சோர்க்கார் (28), ரோனி (30) ஆகிய மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 8 பேரும் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்குக் கொண்டு சென்றனர்.