உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

நீலகிரி: கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை மூன்று தினங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை மூன்று தினங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.



நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இம்மாதம் துவக்கம் முதலே மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் கடந்த 6-ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து வழக்கம் போல் சுற்றுலா பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டு சென்ற நிலையில் கல்லார் ரயில்நிலையம் முதல் ரன்னிமேடு ரயில்நிலையம் வரையிலான மலை ரயில் இருப்புப்பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து மலை ரயில் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டு பயணிகள் வேறு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டதோடு அன்றைய தினம் நீலகிரிக்கான ரயில் சேவை ரத்தும் செய்யப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினாலும், நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும் 7, 8, மற்றும் 9 தேதிகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் இன்று மீண்டும் வழக்கம் போல் துவங்கியுள்ளது. நேற்று முதல் இப்பகுதிகளில் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளதால் மூன்று நாட்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளோடு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி நீலகிரி மலை ரயில் புறப்பட்டு சென்றது.

இதனால் மலை ரயிலில் பயணிக்க ஆர்வத்தோடு வந்திருந்த பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...