கோவை : வால்பாறை ஆஷா பணியாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை : வால்பாறை ஆஷா பணியாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 ஆஷா என்னும் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இது குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் முறையிட்டபோது ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி கிடைக்கப் பெறவில்லை என புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முறையாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஆஷா பணியாளர்கள் மனு அளித்தனர். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

வால்பாறை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 ஆஷா என்னும் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இது குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் முறையிட்டபோது ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி கிடைக்கப் பெறவில்லை என புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முறையாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஆஷா பணியாளர்கள் மனு அளித்தனர். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.