கோவை: கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி மோகன்ராம் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி மோகன்ராம் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழிக்குப்பழியாக மகாதேவன், தியாகு, அருண் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 21 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான மோகன்ராமை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் தான் அவரை மும்பையில் வைத்து கோவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். பிரபல ரவுடியான மோகன்ராம், கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். அவர் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டபிறகும் தலைமறைவாக இருந்த மோகன்ராமைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மோகன்ராம் மும்பையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவை காவல்துறையினர் அவரை மும்பையில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இன்று மும்பையிலிருந்து மோகன்ராமை கோவைக்கு அழைத்துவர உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.