நீலகிரி : உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசமாகிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசமாகிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதுடன், கடும் குளிர் வீசி வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் 150 ஆண்டு பழமையான அரக்கேரிய வகை சேர்ந்த மரம் கார்டனில் மையப்பகுதியில் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று மாலை உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் கடுமையான மின்னல் தாக்கியது. இதில் பழமை வாய்ந்த மரம், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.