கோவை : நாட்டின் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வர உள்ள நிலையில், மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை : நாட்டின் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வர உள்ள நிலையில், மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வருகிறார். தனி விமானம் மூலம் பெங்களூரில் இருந்து நாளை மதியம் 12.30 மணிக்கு கோவை வருகிறார். சுற்றுலா விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இந்திய வர்த்தக சபையின் 90 -வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மறுநாள் (அக்.10) பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியின் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் செல்கிறார்.
குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர், புறநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம், சுற்றுலா விருந்தினர் மாளிகை, விழா நடக்கும் சேம்பர் மற்றும் அவர் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை கோவை வருகிறார். தனி விமானம் மூலம் பெங்களூரில் இருந்து நாளை மதியம் 12.30 மணிக்கு கோவை வருகிறார். சுற்றுலா விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு இந்திய வர்த்தக சபையின் 90 -வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மறுநாள் (அக்.10) பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியின் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் செல்கிறார்.
குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர், புறநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம், சுற்றுலா விருந்தினர் மாளிகை, விழா நடக்கும் சேம்பர் மற்றும் அவர் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.