மனுக்களை மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னை இந்திரா நகர் நலசங்க இளைஞர்கள்

கோவை : அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாலையாக அணிந்து வந்து கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் நலச்சங்க இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாலையாக அணிந்து வந்து கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் நலச்சங்க இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கவுண்டம்பாளையம் 8-வது வார்டுக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர், மீனாட்சி நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாயை மூட கோரியும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். 



ஆனால், தங்களது மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாலையாக அணிந்து வந்து அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நல இளைஞர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதி மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தற்போது பெய்து வரும் மழையினால் தொற்று நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முறையாவது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...