தொழில்வரியை உயர்த்தியது கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை: மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் தொழில் வரி அக்டோபர் 1-ம் தேதி முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் தொழில் வரி அக்டோபர் 1-ம் தேதி முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சொத்துவரி, தொழில்வரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம் போன்ற பல்வேறு வரி இனங்கள் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் தொழில் வரி, தனி நபரின் அரையாண்டு சம்பளத் தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படுகிறது. 



இந்நிலையில், கோவை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தொழில் வரித்தொகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தொழில் வரித்தொகை கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, ஆறு மாத சம்பளத் தொகையாக மொத்தம் ரூ.21 ஆயிரம் பெறுபவர்களுக்கு தொழில்வரி வசூலிக்கப்படுவதில்லை. 

ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.127 வசூலிக்கப்பட்டு வந்த தொழில்வரி தற்போது ரூ.171 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.317 வசூலிக்கப்பட்டு வந்த தொழில்வரி தற்போது ரூ.428 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.634 வசூலிக்கப்பட்டு வந்த தொழில்வரி தற்போது ரூ.856 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.60,001 முதல் ரூ.75,000 வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் ரூ.950 வசூலிக்கப்பட்டு வந்த தொழில் வரித்தொகை ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.75 ஆயிரத்திற்கு மேல் (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.1,250 ஆக வசூலிக்கப்பட்டு வந்த தொழில் வரித்தொகை அதே அளவில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு நடவடிக்கையால் மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாய் அதிகரிக்கும் எனவும், இந்த தொகை நகரின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும் என மாநகராட்சி அதிகாரிகள் கருதுகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...