கோவையில் செல்போன் சார்ஜ் போட்ட இளைஞரும் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த இளைஞரும் மின்சாரம் தாக்கி பலி

கோவை: கோவை செல்வபுரம் மற்றும் போத்தனூர் பகுதிகளில் மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவை செல்வபுரம் மற்றும் போத்தனூர் பகுதிகளில் மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செல்வபுரம் பகுதியில் வசிப்பவர் ராமு (41). இவருடைய அக்கா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் உள்ளார். அவருடைய மகன் ராஜா (19) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஹோட்டல் வேலைக்காக கோவையில் வசித்து வருகிறார். ராஜா சுந்தரம் தெருவில் உள்ள பெரியநாயகி ஹோட்டலில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.



இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி முடிந்து ஹோட்டலில் உள்ள அவரது அறைக்குச் சென்று உள்ளார். அப்போது செல்போன் சார்ஜ் போட்டு விட்டு வயரை அகற்ற முயன்றபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்த ராஜாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனில்லாமல் ராஜா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல தஞ்சாவூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் செல்லத்துரை(29). இவர் போத்தனூர் கருணாநிதி நகர் முதல் தெருவில் உள்ள ஒரு புதிய வீடு கட்டும் பணியில் இருந்தார். 

நேற்று மாலை புதிய வீட்டின் மேல் தளத்தில்

சென்ற மின்சார கம்பியில் கை பட்டதில்

மின்சாரம் தாக்கி மயங்கிக் கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 

இவருக்கு ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஒரே நாளில் இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...