கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோவையில் இன்று நடைபெற்ற பனைத்திணை திருவிழாவில் 20 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோவையில் இன்று நடைபெற்ற பனைத்திணை திருவிழாவில் 20 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
பனைத்திணை திருவிழாவுக்காக மேற்கு மண்டலம் முழுவதிலும் இருந்து 1.5 லட்சம் பனை விதைகள் திரட்டப்பட்டன.

சேலம், அவினாசி, தாராபுரம், கரூர், கிணத்துக்கடவு மற்றும் வெள்ளலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட இந்த பனை விதைகள் கோவையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று உக்குளம், வெள்ளலூர் குளம், அரிசிபாளையம், அன்னூர், சாடிவயப், அய்யாசாமி மலை, மதுக்கரை வனப்பகுதி போன்ற பல்வேறு பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பனை விதைகளை சேகரித்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, பனை மரங்களை வளர்க்கும் பொருட்டு பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பணியின் போது, விதைகளை நடவு செய்ய தேவையான உபகரணங்களை தன்னார்வலர்களே எடுத்து வந்தனர்.
மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விதைகளை நடவு செய்வது நன்மை பயக்கும் என்கின்றனர் தன்னார்வலர்கள்
பனைத்திணை திருவிழாவுக்காக மேற்கு மண்டலம் முழுவதிலும் இருந்து 1.5 லட்சம் பனை விதைகள் திரட்டப்பட்டன.

சேலம், அவினாசி, தாராபுரம், கரூர், கிணத்துக்கடவு மற்றும் வெள்ளலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட இந்த பனை விதைகள் கோவையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று உக்குளம், வெள்ளலூர் குளம், அரிசிபாளையம், அன்னூர், சாடிவயப், அய்யாசாமி மலை, மதுக்கரை வனப்பகுதி போன்ற பல்வேறு பகுதிகளில் 20,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பனை விதைகளை சேகரித்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, பனை மரங்களை வளர்க்கும் பொருட்டு பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பணியின் போது, விதைகளை நடவு செய்ய தேவையான உபகரணங்களை தன்னார்வலர்களே எடுத்து வந்தனர்.
மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விதைகளை நடவு செய்வது நன்மை பயக்கும் என்கின்றனர் தன்னார்வலர்கள்