இதுவரை சன்மானம் கிடைக்கவில்லை: வீரப்பனை என்கவுண்டர் செய்ய போலீசாருக்கு உதவிய சண்முகப்பிரியா கோவையில் பேட்டி

கோவை: தமிழக, கர்நாடக வனப்பகுதிகளில் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை என்கவுண்டர் செய்ய முக்கிய பங்காற்றிய சண்முகப்பிரியா விற்கு அரசு அறிவித்த எந்த சன்மானமும் தொகையும் வரவில்லை சண்முகப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: தமிழக, கர்நாடக வனப்பகுதிகளில் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை என்கவுண்டர் செய்ய முக்கிய பங்காற்றிய சண்முகப்பிரியா விற்கு அரசு அறிவித்த எந்த சன்மானமும் தொகையும் வரவில்லை சண்முகப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.



வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை என்கவுண்டர் செய்ய தமிழக-கர்நாடக அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன.

இப்படியிருக்க வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறையினர் தங்க வைத்தனர்.

அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன் வீரப்பன் மனைவியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும்படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

இந்த நிலையில் முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய சண்முகப்பிரியா வீரப்பன் குறித்த தகவல்களை சேமித்து அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார்.

இதில் வீரப்பன் நடமாட்டம் குறித்தும், வீரப்பனுக்கு கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களையும் சேகரித்து அதிரடி படையினருக்கு கொடுத்தார்.

இந்த தகவல்கள் வீரப்பனை என்கவுண்டர் செய்ய காவல் துறைக்கு முக்கிய பங்காற்றியது.

இந்த தகவல்கள் மூலம் வீரப்பனை அதிரடிப்படையினர் என்கவுண்டர் செய்தனர்.

கடந்த 2004ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரப்பனை என்கவுண்டர் செய்ய முக்கிய தகவல்கள் அளித்த சண்முகப்பிரியாவிற்கு மத்திய அரசின் சார்பில் 5 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலம், பரிசுத்தொகை போன்றவை எதுவும் வழங்கவில்லை என தற்போது சண்முகப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து சண்முகப்பிரியா வடவள்ளியில் தனது வீட்டிலிருந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

14 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகள் அறிவித்த வெகுமதிக்காக போராடி வருகிறேன். ஆனால் இதுவரை நிதி ஏதும் கிடைக்கவில்லை. 

தற்போது எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினைகள் போன்ற பல சிக்கல்களில் நான் வாழ்ந்து வருகிறேன். 

இப்படி பல்வேறு சிரமங்களில் வாழ்ந்து வரும் எனக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றி எனக்கு உதவ வேண்டும்.

அதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா 'கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் போட்டார்.

ஆறு லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை.

இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தமிழக தயாரிப்பாளர் சங்கம் திரைப்பட நடிகர்கள் சங்கம் என திரையுலகில் இது தொடர்பாக முறையிட்டும் அவர்களிடமிருந்து இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இவ்வாறு சண்முகப்பிரியா தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...