திருப்பூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தமிடல் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான் கடன் வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தமிடல் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான் கடன் வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை தலைவர் தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, கடந்த 7ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் சுய உதவிக்குழுக்களுக்காக 44,756 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களில் சுமார் 1944.49 கோடி ரூபாய் வரை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சியில் அ.தி.மு.க அரசு முழுக்கவனம் செலுத்தி வருவதால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதில் சட்டப்பேரவை தலைவர் தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, கடந்த 7ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் சுய உதவிக்குழுக்களுக்காக 44,756 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களில் சுமார் 1944.49 கோடி ரூபாய் வரை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சியில் அ.தி.மு.க அரசு முழுக்கவனம் செலுத்தி வருவதால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.