திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கும் பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கும் பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து அறிவுரை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அதிதீவிரமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் முழுவதுமே பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தன. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அவர்கள் வெள்ள பாதிப்பின் போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழி அறிவுரை வழங்கினார். மேலும், மாவட்டம் முழுவதும் காவல்நிலையங்களில் காவலர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பின் போது மீட்புபணிக்கான உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அதிதீவிரமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் முழுவதுமே பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தன. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அவர்கள் வெள்ள பாதிப்பின் போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழி அறிவுரை வழங்கினார். மேலும், மாவட்டம் முழுவதும் காவல்நிலையங்களில் காவலர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பின் போது மீட்புபணிக்கான உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.