கோவை : விநாயகர் சதுர்த்திக்கு கேட்ட பணம் கொடுக்காத நபரின் கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை ஆர்.எஸ். புரம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை : விநாயகர் சதுர்த்திக்கு கேட்ட பணம் கொடுக்காத நபரின் கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை ஆர்.எஸ். புரம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
தடாகம் பகுதியைச் சேர்ந்த ராமனின் மகன் ஆறுமுகம் (42), தாமஸ் வீதியில் வசித்து வரும் ராமலிங்கத்தின் மகன் ரமேஷ் குமார் (42) ஆகிய இருவரும் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடையை சேகரித்து வந்தனர். இதில், தடாகம் சாலையில் உள்ள சபரி பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 5,000 தருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை பிறகு வாங்கிக் கொள்வதாக வசூல் செய்ய வந்த இருவரும் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி எல்லாம் முடிந்து கடந்த 3-ம் தேதி மீண்டும் பேக்கரிக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், பேக்கரியில் உரிமையாளர் இல்லாததால், பணத்தைக் கொடுக்க பணியாளர்களும் மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன், கத்தியை காண்பித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பின்னர், தகவலறிந்து வந்த கடை உரிமையாளர் உதயகுமார் (52) ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், இருவர் மீதும் 294 b,341,384 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தடாகம் பகுதியைச் சேர்ந்த ராமனின் மகன் ஆறுமுகம் (42), தாமஸ் வீதியில் வசித்து வரும் ராமலிங்கத்தின் மகன் ரமேஷ் குமார் (42) ஆகிய இருவரும் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடையை சேகரித்து வந்தனர். இதில், தடாகம் சாலையில் உள்ள சபரி பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 5,000 தருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை பிறகு வாங்கிக் கொள்வதாக வசூல் செய்ய வந்த இருவரும் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி எல்லாம் முடிந்து கடந்த 3-ம் தேதி மீண்டும் பேக்கரிக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், பேக்கரியில் உரிமையாளர் இல்லாததால், பணத்தைக் கொடுக்க பணியாளர்களும் மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன், கத்தியை காண்பித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பின்னர், தகவலறிந்து வந்த கடை உரிமையாளர் உதயகுமார் (52) ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், இருவர் மீதும் 294 b,341,384 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.