அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தேர்வு : உதவி பேராசிரியரின் குற்றச்சாட்டிற்கு பாரதியார் பல்கலை., விளக்கம்

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி முறையான பணிச்சேர்க்கை நடைபெறவில்லை என பாரதியார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தேர்வு நடைபெறுவதாக விளக்கம் பல்கலைக்கழக குழு விளக்கம் அளித்துள்ளது.

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி முறையான பணிச்சேர்க்கை நடைபெறவில்லை என பாரதியார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தேர்வு நடைபெறுவதாக விளக்கம் பல்கலைக்கழக குழு விளக்கம் அளித்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூக பணி பயின்ற இவர், நெட் ஜே.ஆர்.எப். (NET JRF) தேர்வில் தேர்ச்சி பெற்று, அப்பல்கலைக்கழகத்திலேயே சமூக சேவை துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2016-ம் ஆண்டு பணித்தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், தனது தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை உணர்ந்த வெங்கடேசன், இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சார்ந்த அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எந்த அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டேன் என்றும், முறையாக பணிதேர்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்

இதனிடையே, முன்னாள் துணை வேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட நிலையில், அவருக்கு பதிலாக அமைக்கப்பட்ட துணைவேந்தர் குழுவும் வெங்கடேசனின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்காமல் கடந்த மார்ச் மாதம் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் தனது அரசு வேலையை இழந்த வெங்கடேசன், தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாகவும், தனது கோரிக்கையை ஏற்று, முறையான விதிமுறைகளைப் பின்பற்றி பணித்தேர்வு செய்யப்பட்டேன் என நிரூபிக்கப்பட்டால் பணியில் மீண்டும் சேர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். வழக்கமாகப் பணிக்காக லஞ்சம், முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில், முறையாக விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிந்தவுடன், பணியை ராஜினிமா செய்துவிட்டு, சட்டப்போராட்டத்தில் ஈடுபடும் வெங்கடேசனின் முடிவு அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது, பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் பொது என்ற பிரிவுக்குள் உள்ஒதுக்கீட்டின்படி வெங்கடேசனை தேர்வு செய்யப்பட்டதாகவும், அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தெர்வு நடைபெறுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...