கோவை : கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை மட்டுமே அவசியம் தவிர பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை மட்டுமே அவசியம் தவிர பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரம் வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் 31.5 அதிகபட்சமாக பதிவாகக்கூடும் இரவு நேரத்தில் 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 10 கி.மீ. முதல் 12 கி.மீ. வரை வீசக்கூடும்.
ரெட் அலர்ட் என சொல்லக்கூடிய 7-ம் தேதி கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது 90 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரமடையில் 80 மி.மீட்டரும், சர்க்கார் சமாக்குளத்தில் 40 மி.மீட்டரும், பெரியநாயக்கன்பாளையத்தில் 41 மிமீ, மதுக்கரையில் 25 மி.மீட்டரும், ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, அன்னூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தூரல் மழை பெய்யும்.
அடுத்த மூன்று நாட்களில் கோவையில் 110 மி.மீட்டரும், நீலகிரியில் 110 மி.மீட்டரும், திருப்பூரில் 70 மி.மீட்டரும், ஈரோட்டில் 100 மி.மீட்டர் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலர்ட் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம், பயப்படத் தேவையில்லை.
விவசாயிகள் நீர் பாய்ச்ச வேண்டாம். பூச்சி மருத்துகள் அடிக்க வேண்டாம். வடிகால்களை சீர்செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும். கரும்புகளுக்கு விட்டம் கட்ட வேண்டும். கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்றார்.