ஊதியத்தில் முறைகேடு : திருப்பூர் ரயில்நிலைய உதவி மேலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட கூட்செட் தொழிலாளர்கள்

திருப்பூர் : ஊதியத்தில் முறைகேடு செய்ததாகக் கூறி திருப்பூர் ரயில் நிலைய உதவி மேலாளரின் அலுவலகத்தை கூட்செட் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

திருப்பூர் : ஊதியத்தில் முறைகேடு செய்ததாகக் கூறி திருப்பூர் ரயில் நிலைய உதவி மேலாளரின் அலுவலகத்தை கூட்செட் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .



ரயில்.நிலையத்திற்கு வரும் சரக்குகளை ஏற்றி இறக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் திருப்பூர் ரயில் நிலையம் வந்த ஹவுரா செல்லும் சரக்கை ஏற்றி, இறக்கியதற்கான தொகை சுமார் ரூ. 28,000 பணத்தை உதவி மேலாளர் முத்துக்குமார் முறைகேடு செய்ததாகக் கூறி ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மேலும், சரக்குகளை ஏற்றி இறக்கும் நடைபாலத்தை சமதளமாக்க வேண்டும் எனவும், முறையான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர்கள் பணியினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மேலாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணலாம் என உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...