திருப்பூர் : நடிகர் விஜயினால் வார்டு மெம்பர் கூட ஆக முடியாது என சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனருமான தனியரசு விமர்சித்துள்ளார்.
திருப்பூர் : நடிகர் விஜயினால் வார்டு மெம்பர் கூட ஆக முடியாது என சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனருமான தனியரசு விமர்சித்துள்ளார்.
திருப்பூர் குமரனின் 115-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு எம்.எல்.ஏ. தனியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- யாரோ எழுதிக்கொடுத்த வசனங்களை, கவிதைகளை பேசியவர்களெல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுவதா..?. தமிழகத்திற்காக அவர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள் என சொல்ல முடியுமா..?. ஏற்கனவே, முதலமைச்சர் கனவில் வந்த ரஜினி, கமல் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்து, தற்போது நிர்கதியாகியிருக்கிறார்கள். அஞ்சி ஓடுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இனியும் கோடம்பாக்கத்திலிருந்தோ, சாலிகிராமத்திலிருந்தோ அரிதாரம் பூசிக்கொண்டு ஒருவர் கூட அரசியலுக்கு வரமுடியாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நடிகர் விஜயினால் அவரது வார்டு மெம்பர் கூட ஆக முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் குமரனின் 115-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு எம்.எல்.ஏ. தனியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- யாரோ எழுதிக்கொடுத்த வசனங்களை, கவிதைகளை பேசியவர்களெல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுவதா..?. தமிழகத்திற்காக அவர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள் என சொல்ல முடியுமா..?. ஏற்கனவே, முதலமைச்சர் கனவில் வந்த ரஜினி, கமல் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்து, தற்போது நிர்கதியாகியிருக்கிறார்கள். அஞ்சி ஓடுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இனியும் கோடம்பாக்கத்திலிருந்தோ, சாலிகிராமத்திலிருந்தோ அரிதாரம் பூசிக்கொண்டு ஒருவர் கூட அரசியலுக்கு வரமுடியாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நடிகர் விஜயினால் அவரது வார்டு மெம்பர் கூட ஆக முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.