திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகள், உடைமைகள், உறவுகளை இழந்து பொதுமக்கள் தவித்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தன.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகள், உடைமைகள், உறவுகளை இழந்து பொதுமக்கள் தவித்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தன.
இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பருவ மழை சற்று தணிந்ததை அடுத்து, கேரளாவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர். தங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள தீவிரமாகிக் கொண்டிருக்கின்றனர்.