கோவை : கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் மகாபாரதம் குறித்த சுவர் சித்ரா கலா ஓவியக் கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையில் இன்று தொடங்கியது.
கோவை : கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் மகாபாரதம் குறித்த சுவர் சித்ரா கலா ஓவியக் கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையில் இன்று தொடங்கியது.
6 - ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் மகாபாரதம் குறித்த சிறந்த ஓவியர் பிரின்ஸ் தொண்ணாக்களின் 35 மாணவியர் வரைந்த 112 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த 26 பேரும், சென்னையைச் சேர்ந்த 8 பேரும், டெல்லியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

ஓவியத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் ஓவியர் பிரின்ஸ் தொண்ணக்கள். இவர் குருவாயூரில் உள்ள இன்டியூட்டிட் ஆப் மூரல் பெயின்ட்டிங் பட்டப்படிப்பைப் பயின்றவர். இவர் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவியருக்கு சுவர் ஓவியம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். அதைத் தவிர, இயற்கை வண்ணங்களை வைத்து எப்படி ஓவியம் தீட்டுவது குறித்து கற்றுக் கொடுக்கிறார். அவரின் ஓவியங்கள் பத்மாஸ்வாமி கோயில், ஹோட்டல்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்படங்களிலும் இடம்பெறவுள்ளன.
ஏற்கெனவே, இத்தகைய ஓவியக் கண்காட்சி திருவனந்தபுரத்திலும், சென்னையிலும் நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கோவையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவியரும், பொதுமக்களும் பங்கேற்கலாம்.
6 - ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் மகாபாரதம் குறித்த சிறந்த ஓவியர் பிரின்ஸ் தொண்ணாக்களின் 35 மாணவியர் வரைந்த 112 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த 26 பேரும், சென்னையைச் சேர்ந்த 8 பேரும், டெல்லியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

ஓவியத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் ஓவியர் பிரின்ஸ் தொண்ணக்கள். இவர் குருவாயூரில் உள்ள இன்டியூட்டிட் ஆப் மூரல் பெயின்ட்டிங் பட்டப்படிப்பைப் பயின்றவர். இவர் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவியருக்கு சுவர் ஓவியம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். அதைத் தவிர, இயற்கை வண்ணங்களை வைத்து எப்படி ஓவியம் தீட்டுவது குறித்து கற்றுக் கொடுக்கிறார். அவரின் ஓவியங்கள் பத்மாஸ்வாமி கோயில், ஹோட்டல்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்படங்களிலும் இடம்பெறவுள்ளன.
ஏற்கெனவே, இத்தகைய ஓவியக் கண்காட்சி திருவனந்தபுரத்திலும், சென்னையிலும் நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கோவையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவியரும், பொதுமக்களும் பங்கேற்கலாம்.