தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயியை கவுரவித்த பிரதமர் மோடி

டெல்லி : தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 100 கோடி நன்கொடையாக அளித்த மாதா அமிர்ந்தானந்தமயி தேவிக்கு விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

டெல்லி : தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 100 கோடி நன்கொடையாக அளித்த மாதா அமிர்ந்தானந்தமயி தேவிக்கு விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

ராஷ்ட்ரபதி பவன் கலாச்சார மையத்தில் மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார சம்மேளனத்தில் பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் ஆன்டோனியோ கியுடெர்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா செயல்திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கு (ஸ்வச் பாரத் கோஷ்) மிகப்பெரிய பங்களிப்பான ரூ.100 கோடிகளை வழங்கிய ஸ்ரீ மாதா அமிர்ந்தானந்தமயி தேவிக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இத்தொகை, கங்கை நதியோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு கழிவறைகளை கட்டுவதற்காக செலவிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :- மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சுத்தநிலை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பின் மீதான அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய சேவைக்கு அம்மாவிற்கு நன்றி. அவர் “எனது பிரத்தியேக நன்றிகளை நான் அம்மா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இப்பணியை நாங்கள் துவங்கியவுடன், இதற்கான பொறுப்பினை அவர் மனமுவந்து தனது தோள்களில் ஏற்றிக்கொண்டார். பல்வேறு பெரும் தலைவர்கள் மற்றும் அம்மா போன்ற ஆன்மீகத் தலைவர்களை உத்வேகமாகக் கொண்டு, ஸ்வச் பாரத் செயல்திட்டம் பெரும் வலிமை பெற்றது மற்றும் வெறும் பிரச்சாரம் என்னும் நிலையிலிருந்து வளர்ந்து, தற்போது ஒரு தேசிய அளவிலான இயக்கமாக வலுவடைந்துள்ளது, என்று கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...