52 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் திருமுருகன் காந்தி

வேலூர்: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


வேலூர்: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் பேசியதாகவும், அவர் மெது ஏற்கனேவே 24 வழக்குகள் உள்ளதையும் காரணம் காட்டி அவரை கைது செய்த அதிகாரிகள், வேலூர் சிறையிலடைத்தனர்.

அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். சிறையில் திருமுருகன் காந்தி பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவியது. இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

அவர் கடந்த 10 நாட்களாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புனையப்பட்ட இந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க இருபதாக மே-17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...