கோவை : விநாயகர் சதுர்த்தி வசூல் குறித்த வரவு - செலவு கணக்கு சரிபார்ப்பின் போது ஏற்பட்ட தகராற்றில் நண்பரையே பாட்டிலால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியை ஆலந்துறை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : விநாயகர் சதுர்த்தி வசூல் குறித்த வரவு - செலவு கணக்கு சரிபார்ப்பின் போது ஏற்பட்ட தகராற்றில் நண்பரையே பாட்டிலால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியை ஆலந்துறை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி என்ற குட்டி. இவர் பா.ஜ.க.,வின் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் இணைந்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விசர்ஜனம் செய்தனர். இதில், மீதமிருந்த தொகையில், இவர்கள் கிடா வெட்டி, மது விருந்து வைத்துள்ளனர்.
போளுவாம்பட்டி கணபதி தோட்டத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின் போது, பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கந்தசாமியிடம் அவரது நண்பர் விஜயகுமாரின் மகன் நாகராஜ் (21) வரவு - செலவு கணக்கு குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி, அருகிலிருந்த மது பாட்டிலை உடைத்து, நாகராஜின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நாகராஜ், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க., பொறுப்பாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 307, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி என்ற குட்டி. இவர் பா.ஜ.க.,வின் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் இணைந்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விசர்ஜனம் செய்தனர். இதில், மீதமிருந்த தொகையில், இவர்கள் கிடா வெட்டி, மது விருந்து வைத்துள்ளனர்.
போளுவாம்பட்டி கணபதி தோட்டத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின் போது, பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கந்தசாமியிடம் அவரது நண்பர் விஜயகுமாரின் மகன் நாகராஜ் (21) வரவு - செலவு கணக்கு குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி, அருகிலிருந்த மது பாட்டிலை உடைத்து, நாகராஜின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நாகராஜ், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க., பொறுப்பாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 307, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.