காமராஜரின் நினைவுநாளையொட்டி மாணவர்களுக்கு அரசு பள்ளியில் இலவச காலை உணவு விநியோகம்

கோவை : முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு நாளையொட்டி உருமாண்டபாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது.

கோவை : முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு நாளையொட்டி உருமாண்டபாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில், கல்விக் கண் திறந்தவர் என்ற பெருமையைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை மாணவர்களின் கல்வி கனவை நினைவாக்கும் வகையில், இலவச மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வெற்றி திட்டமான மதிய உணவுத் திட்டத்தை, போற்றும் வகையில் இலவச உணவு வழங்கிய பள்ளி என்ற பெருமையை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. 



இந்தப் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை பின்னடைவாகவே உள்ளது. வெறும் 60 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

முன்னாள் மானவர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதோடு, திருவள்ளூர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.ஆர். கிருஷ்ணன், வின்னர் இந்தியா சி.கே. கிருஷ்ணன், ஏ.குமாரசாமி, யு.கே. பாபு, ஆடிட்டர் ஜி. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

நாடு வளமுடன் இருக்க மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...