கரூர் : உயர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் : உயர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் புரவிபாளையத்தை சேர்ந்தவர் கே. செந்தில்குமார் (38). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை க.பரமத்தி அருகே பவித்திரம் கீழ்புறம் பகுதியில் உயிர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளியான காளிமுத்து (45) என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சத்தியத்தால் தான் நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதேபோல, அரசு தரப்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை மின்வாரிய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் வரும் வரை கே. செந்தில்குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.


கரூர் மாவட்டம் புரவிபாளையத்தை சேர்ந்தவர் கே. செந்தில்குமார் (38). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை க.பரமத்தி அருகே பவித்திரம் கீழ்புறம் பகுதியில் உயிர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளியான காளிமுத்து (45) என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சத்தியத்தால் தான் நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதேபோல, அரசு தரப்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை மின்வாரிய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் வரும் வரை கே. செந்தில்குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.
