கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் 2 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை தூய்மை படுத்தும் பணிகளை ராக் தலைமையிலான தன்னார்வ அமைப்புகள் இன்று தொடங்கினர்.
கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் 2 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை தூய்மை படுத்தும் பணிகளை ராக் தலைமையிலான தன்னார்வ அமைப்புகள் இன்று தொடங்கினர்.

பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களைக் கொண்ட ஜி.வி.ரெசிடண்டி இணைப்பு சாலையை சுத்தம் செய்யும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.

'ஸ்வச் ரோடு' எனப்படும் தூய்மையான சாலையை உருவாக்குவதற்காக ராக் அமைப்பினர், ஜி.வி.ரெசிடன்சி நலச் சங்கத்தினர், சன்னிசைட் குடியிருப்பு நல சங்கத்தினர், பி.எஸ்.ஜி.மருத்துவமனை அலுவலர்கள், நேஷனல் மாடல் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஊழியர்களோடு இணைந்து ஜி.வி.ரெசிடன்சி இணைப்பு சாலையை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

சாலையை ஆக்கிரமித்திருந்த செடிகள், ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் குப்பைகளை தன்னார்வலர்களின் உதவியதோடு மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சாலையின் மின் விளக்குகள் புனரமைக்கப்பட்டு, மழையால் ஏற்பட்டுள்ள குழிகள் தார் பூசப்பட்டு சீரமைக்கப்பட உள்ளதாகவும், வாரந்தோறும் தன்னார்வலர்கள் இணைந்து சாலையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் ராக் அமைப்பைச் சேர்ந்த ரவீந்தரன் தெரிவித்தார்.
