ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான ஊதியம் கோரி ரத்த கையெழுத்திட்டு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம்

கோவை : ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன போராட்டம் நடத்தினர்.


கோவை : ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

ஊராட்சி செயலாளர்கள், பதுவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த 28.12.2017-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டு விரைவில் அரசாணை வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது.



அரசு ஏற்றுக்கொண்ட ஊதிய மாற்றத்திற்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து ரூ. 30 கோடி ஊதியம் பிடித்தம் செய்யபட்டது.



தொடர் நினைவூட்டல்கள் மூலம் அரசிற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படாததை முன்னிட்டு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் நினைவூட்டல் கடிதத்தில் ரத்த கையெழுத்திட்டனர். இதனை முதலமைச்சர், துணை முதலமைச்சர், நீதித்துறை செயலர், ஊரக வளர்ச்சி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு என காந்தி ஜெயந்தி நாளான நாளை ஒரு லட்சம் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்ப உள்ளனர்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...